தவெக – தேமுதிக கூட்டணியா? ஜன.9 மாநாட்டில் அறிவிப்பு வெளியாகும்: விஜய பிரபாகரன் தகவல்

கரூர்: தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக...

இணைநோய் இல்லாதவர்களுக்கு கரோனாவால் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் இணைநோய் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்படுவர்கள் விரைவில் குணமடைகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், இணைநோய் பாதிப்புள்ளவர்கள், முதியவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து...

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் குரல் என்னுடையது – இபிஎஸ்

சென்னை: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 4-ம் தேதி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில்,...

ஜூன் 10 முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல்...

நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில்...

காயிதே மில்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்: நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் 130-வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். சுதந்திர போராட்ட வீரர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் மறைந்த காயிதே மில்லத்தின்...

பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ – பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின்...

இன்று பக்ரீத் பண்டிகை: முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட...

ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம்

பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில்...

கிராம உதவியாளர்கள் நியமனத்துக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை: கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த்...