
ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்.12) மதுரையில் தொடங்குகிறார். இதையொட்டி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் தரிசனம் செய்தார். பாஜக மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.