
மதுரை: திண்டுக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக நிலத்தை அரசு கையகப்படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதமானதையடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் வருவாயை நீதிமன்ற கணக்கில் செலுத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர் தங்களது கடைகள் அமைந்திருந்த இடத்தை 2017-ம் ஆண்டு கையகப்படுத்தியதற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில் குறைக்கப்பட்ட தொகையை வழங்கக் கோரி 2019-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.