
சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். 6 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் நேரலையில் கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்த கூட்டங்களில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாயுமானவர்’ திட்டத்தின்கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவுநிலை குறைப்பு திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதுதவிர, ‘நம்மஊரு, நம்ம அரசு’ திட்டத்தில் கண்டறியப்பட்ட தேவைகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள், திட்டங்கள் உட்பட 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.