
பழநி: “கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழக பாஜக புதிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (அக்.11) மாலை நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது: “2026 ஏப்.20-ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜனவரி 10-ம் தேதிக்கு மேல் கூட்டணி கட்சிகள் குறித்து தீர்மானித்து முடிவு எடுக்கப்படும். பாஜகவில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட மாநில தலைவர் பதவிக்கு வர முடியும்.