• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “இப்போது நான் விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்கு காசு கொடுக்கிறது என சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்கு தேவையில்லை” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூக நீதிப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் சீமான் பேசியது: “நான் புகழ்பெற்ற நடிகராக இருந்தால், அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை தொண்டராக்கிக் கொண்டு, உடனடியாக கட்டமைப்பை உருவாக்கலாம். எந்தப் பின்புலம் இல்லாத நிலையில், அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்கு பெறும் ஒரே கட்சி, நாம் தமிழர்தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *