
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மத்திய பிரதேச பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதன்பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அவர் பணியில் இருந்தபோது பெருமளவில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து குவித்திருப்பதாக புகார் எழுந்தது.