• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு​விக நகர் மண்​டலங்​களில் தூய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்படைத்ததை கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​ கோரி​யும், தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதி முதல் தொடர்ந்து 13 நாட்​கள் போராட்​டம் நடத்​தினர்.

நீதி​மன்ற உத்​தர​வால், நள்​ளிர​வில் இவர்​கள் கைது செய்​யப்பட்டு, குண்​டுக்​கட்​டாக அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 71 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தனியார் நிறுவனத்தின்கீழ் பணியில் சேராமல், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கும்படி கோரிக்கைவிடுத்து வந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *