
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடந்த வாகன சோதனையின்போது பந்தோல் காவல் நிலையை பொறுப்பாளர் மற்றும் காவலர்கள் ஒரு நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
அப்போது அதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஜல்னாவிற்கு ஒரு பெரிய அளவிலான தொகை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஹவாலா பணம் என சந்தேகப்பட்ட போலீஸார் அதனை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, ஓட்டுநரை அடித்து விரட்டி விட்டு அந்தப் பணத்தை தாங்களே அபகரித்துக் கொண்டனர்.