
சிவகாசி: ”கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்" என சிவகாசியில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரித்துள்ளார்.
சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் அஞ்சல் துறை சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த அண்ணா திமுக தற்போது அமித் ஷா திமுகவாக சுருங்கிவிட்டது.