
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.16, 18-தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், நாளை (அக்.11-ம் தேதி) கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”தென்மேற்கு பருவமழை வரும் அக்.16 முதல் அக்.18ம் தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.