• October 10, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவை அவிநாசி சாலை, ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏறுதளம் இணையும் இடத்தில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்குகட்டப்பட்ட, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதில், சிட்ரா அருகே ஏறுதளம், இறங்குதளம், ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் ஏறுதளம், இறங்குதளம், நவஇந்தியா பகுதியில் ஏறுதளம், இறங்குதளம், அண்ணா சிலை அருகே இறங்குதளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

அண்ணாசிலை இறங்குதளம் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காந்திபுரம் செல்லும் சாலையை இணைக்கிறது. ஹோப்காலேஜ் ஏறுதளம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும், இறங்குதளம் திருச்சி சாலை, விளாங்குறிச்சி சாலையையும் இணைக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *