
புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.