
சென்னை: 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 69 சதவீத இடஒதுக்கீட்டைப்பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.