• October 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று அஞ்​சலி செலுத்​தி​னார்.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்​தில் எல்​லோருக்​கும் எந்த இடத்​துக்கு செல்​லவும் உரிமை உண்டு. என்​னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்​கப்​பட்ட மக்​களை விஜய் சந்திக்க டிஜிபி அலு​வல​கத்​தில் பாதுகாப்பு கேட்க வேண்​டிய அவசி​யம் தமிழகத்​தில் இல்​லை. இந்​தி​யா​வில் இருக்​கக்​கூடிய சில பகு​தி​களைப் போல, அனு​மதி பெற்​று​தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இங்கு கிடை​யாது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *