
சென்னை: செங்கல்பட்டு யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – திருமால்பூருக்கு இன்று காலை 7.27-க்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று காலை 9.31, 9.51, 10.56, பகல் 11.40, நண்பகல் 12.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
திருமால்பூர் – கடற்கரைக்கு காலை 11.05-க்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – கடற்கரைக்கு பகல் 11.30, நண்பகல் 12, மதியம் 1.10, 1.45, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.