
வேடசந்தூர்: என்றும் ‘கை’ நம்மோடு தான் இருக்கும், நம்மைவிட்டு கை என்றும் போகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.