
மேற்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களைச் சேர்ந்த 39 தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இருக்கிறார். இதில், 23 தொகுதிகள் இப்போது அதிமுக கூட்டணி வசம் உள்ளதால் அவற்றை மீட்டெடுக்கும் ‘சக்தி’ செந்தில்பாலாஜிக்கு உள்ளது என நம்பியே இந்தப் பொறுப்பை அவரிடம் விட்டிருக்கிறது திமுக தலைமை.
இதற்கேற்ப தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது களப்பணியைத் தொடர்கிறார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் அதிமுக வசம் உள்ள 10 தொகுதிகளை மீட்கவும், எஸ்.பி.வேலுமணி போன்ற அதிமுக தளகர்த்தர்களை வீழ்த்தவும் சில செயல்திட்டங்களை திமுக செயல்படுத்தவுள்ளது என்கின்றனர் கோவை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.