மதுரை: சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அம்மச்சியாபுரம் கிராமம். 1,000-க்கும் மேற்பட்டோர் வசிக் கின்றனர்.
இக்கிராம மக்களுக்கான குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஊருக்கு முன்பாக புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. கடந்த வாரம் திறக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் தொடங்கியது.