
கோனசீமா: ஆந்திராவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், டாக்டர். பிஆர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ராயவரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 40 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.