• October 9, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு முன்​னிலை வகித்​தார்.

மாவட்ட ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார் தலைமை வகித்​தார். ராபர்ட் புரூஸ் எம்​.பி., எம்​எல்​ஏ-க்​கள் ரூபி மனோகரன், அப்​துல் ​வ​காப், மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் ரேவதி பாலன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முனைஞ்​சிப்​பட்டி மற்​றும் பத்​தமடை ஆகிய இடங்​களில் அமைக்​கப்​பட்ட புதிய ஆரம்ப சுகா​தார நிலை​யக் கட்​டிடங்​களை திறந்​து​வைத்த அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத்​திய பிரதேச மாநிலம் சிந்​து​ வாரா மாவட்​டத்​தில் குழந்​தைகள் உயி​ரிழப்​புக்கு தொடர்​புடைய​தாக கருதப்​படும் ‘கோல்ட்​ரிப்’ இரு​மல் மருந்து குறித்​து, மத்​திய அரசிட​மிருந்து கடந்த 1-ம் தேதி அவசரக் கடிதம் கிடைத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *