
சென்னை: எழும்பூரில் கொலை திட்டத்துடன் பதுங்கிய ரவுடியை போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பரும் சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன் 2 பேர் கத்தியுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்றும் எழும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்பூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர்.