
மும்பை: 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவை கைவிட யார் காரணம் என்பதை காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நவி மும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். இந்தியாவின் மிகப் பெரிய பசுமை விமான நிலையத்திட்டமான இது, 1160 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. உலகின் மிகவும் திறன்மிக்க விமான நிலையங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுதோறும் 9 கோடி பயணிகளையும் 32.5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது.