
சென்னை: உயர் நீதிமன்றம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மீது விசிக-வினர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இரு தினங்களுக்கு முன்னர், வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி நடந்தது.
இது தொடர்பாக வழக்கஞர் ராகேஷ் கிஷோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.