
புதுடெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வரும் ஜனவரி முதல், உறுதி செய்யப்பட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம்.
தற்போது பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்ற விரும்பினால் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, புதிய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து ரத்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.