
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்மல், டிஎஸ்பியான சங்கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்மலின் உத்தரவு அசாதாரணமானது எனக்கூறி டிஎஸ்பியை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.