
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தினை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக “ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.