• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யம் சார்​பில் நடத்​தப்​படும் முதல்வர் கோப்பை போட்​டிகளுக்​கான தொடக்க விழா சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி முதல்​வர் கோப்​பைக்​கான ஜோதியை ஏற்​றி​வைத்​து, கோப்​பையை அறி​முகம் செய்து வைத்​தார். தொடர்ந்​து, விளை​யாட்டு வீரர்​களின் கலை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

இதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு முதல்​வர் கோப்​பைக்​கான போட்​டிகளை திரு​விழா​போல சர்​வ​தேச தரத்​தில் ஒவ்​வோர் ஆண்​டும் நடத்தி வரு​கிறோம். 2023-ல் நடந்த போட்​டிகளில் 3.5 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். அது கொஞ்​சம், கொஞ்​ச​மாக வளர்ந்​து, தற்​போது 16.28 லட்​சம் பேர் கலந்து கொள்​ளும் வகை​யில் உயர்ந்​திருக்​கிறது. தமிழகத்​தில் விளை​யாட்டை மக்​கள் இயக்​க​மாக கொண்​டாடி வரு​வதற்​கு, முதல்​வர் கோப்​பைக்​கான விளை​யாட்​டுப் போட்​டிகளும் முக்​கியக் காரண​மாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *