
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்பில் 4 மல்டி-டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை: மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கி 4 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய ரயில்வேயின் தற்போதைய நெட்வொர்க் கூடுதலாக 894 கி.மீ. அதிகரிக்கும்.