
சென்னை: அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்குப்பின் அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் முறையாக கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகளுடன் பல நாட்கள் காத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேதனைகளை புரிந்துகொள்ளாமல், அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்.