• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக தலைமை. அதேசமயம் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஜான் குமாருக்கு சுமார் 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் இன்னும் இலாகா ஒதுக்காமல் இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

இதனிடையே, பட்​டியல் இனத்​தைச் சேர்ந்த சாய் ஜெ.சர​வணன்​கு​மாரை அமைச்​சர​வையி​லிருந்து தூக்​கியது சர்ச்​சையை கிளப்​பியது. இந்த நிலை​யில், அரசுக்கு எதி​ராக பகிரங்​க​மாக வெடித்​திருக்​கும் சரவணன்​கு​மார், அமைச்​சர​வை​யில் பட்​டியல் இனத்​தவ​ருக்கு இடம் தரா​மல் ஒதுக்​கியது, கரசூரில் தொழிற்​சாலை​களை கொண்டு வரும் குழு​வில் தொகுதி எம்​எல்​ஏ​வான தன்னை சேர்க்​காமல் இருப்​பது உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களை அடுக்கி இருக்​கி​றார். இதற்​கெல்​லாம் இன்​னும் 15 நாட்​களில் தீர்வு கிடைக்​கா​விட்​டால் தொகுதி மக்​களு​டன் சேர்ந்து சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​து​வேன் என மிரட்​டி​யும் இருக்​கி​றார் சரவணன்​கு​மார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *