• October 8, 2025
  • NewsEditor
  • 0

திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தற்போது, சினிமா ஃபாக்டரி அகாடமியின் டீனாக பணியாற்றி வருகிறார்.

ளி என்​பது சினி​மா​வின் ஆன்​மா. அது வெறும் வெளிச்​சமல்ல; அது கதை சொல்​லும் மொழி. ஒளி எப்​படிப் பயன்​படுத்​தப்​படு​கிறது என்​பதே ஒளிப்​ப​தி​வின் பரிணா​மப் பயண​மாக மாறி, உணர்ச்​சி, அர்த்​தம் மற்​றும் மாயையை உரு​வாக்​கு​கிறது. இந்​தப் பயணத்​தின் மறக்க முடி​யாத உதா​ரணம், குரு தத் இயக்​கிய ‘காகஸ் கே பூல்’ (1959). ஒளிப்​ப​தி​வாளர் வி.கே.​மூர்த்தி இருண்ட படப்​பிடிப்பு தளத்​தில் ஒரே ஒரு திட​மான ஒளிக்​க​திரைப் பயன்​படுத்தி சினிமா வரலாற்​றில் எப்​போதும் நிலைத்​திருக்​கும், காட்​சியை உரு​வாக்​கி​னார். வெறுமை​யான ஸ்டூடியோ​வில் குரு தத் தனி​யாக அமர்ந்​திருக்​கும் அந்த ஒளிக்​க​திர் தனிமை, அழிந்​து​போகும் புகழ், கலைத் தேடல் ஆகிய​வற்​றைச் சின்​ன​மாக வெளிப்படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *