• October 8, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் கட்சி என்ற அந்​தஸ்தை தவெக இழந்​து​விட்​டது. எனவே, அக்​கட்​சி​யின் பதிவை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்ய வேண்​டும் என்று இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். நாமக்​கல் ஆஞ்​சநேயர் கோயி​லில் நேற்று வழிபட்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யினர் தொடர்ந்து பாலஸ்​தீனத்​துக்கு ஆதரவு என்ற போர்​வை​யில் தீவிர​வாத இயக்​கங்​களுக்கு ஆதரவு கொடுத்து வரு​கிறார்​கள். அத்​தகைய இயக்​கங்​களை தடை செய்ய வேண்​டும்.

கரூர் நகரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் அப்​பாவி மக்​கள் 41 பேர் உயி​ரிழந்​தனர். சென்னை மெரினா கடற்​கரை​யில் நடந்த விமானப்​படை சாகச நிகழ்ச்​சி​யில், முதல்​வர் முன்​னிலை​யில் 60 பேர் மயக்​கமடைந்​தனர். 6 பேர் உயி​ரிழந்​தனர். அரசி​யல், பொது நிகழ்ச்​சிகளில் கூட்ட மேலாண்​மையை சரிவர கடைப்​பிடிப்​ப​தில்​லை. திரு​வண்​ணா​மலை கிரிவலப்​பாதை​யில் நெரிசலில் பக்​தர்​கள் சிக்​கு​வதைத் தடுத்​து, அவர்​களுக்கு உரிய பாது​காப்பு தர வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *