
கும்பகோணம்: கரூர் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, வரும் 25, 26, 27-ம் தேதிகளில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.