
புதுடெல்லி: சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா வலுவான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பது அவசியம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்றொரு முக்கிய சீர்திருத்தம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் ராஜீவ்கவுபா தலைமையிலான குழு ஏற்கெனவே இந்த சீர்திருத்தங்கள் குறித்த முதல் அறிக்கைகளை சமர்பித்துள்ளது.