• October 7, 2025
  • NewsEditor
  • 0

பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *