• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சனாதனவாதிகளுக்கு ஒரு அம்பேத்கரிய சிந்தனையாளர் தலைமை நீதிபதியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி செய்கின்றனர். ராகேஷ் கிஷோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயற்சித்துள்ளார். தலைமை நீதிபதி மீது இயல்பிலேயே உள்ள வன்மம்தான் இதற்கு காரணம். தலைமை நீதிபதி கவாய் பவுத்தத்தை தழுவியவர் என்றாலும் அவர் ஒரு அம்பேத்கர் சிந்தனையாளர். பவுத்தத்தை தழுவியதால் அவர்கள் தலித் ஆக மாட்டார்கள் என ராகேஷ் கிஷோரே கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *