
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அக்.3-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் அக்.3-ம் தேதி மட்டும் 30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த தொடர் மழை மற்றும் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப் படாததால் குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.