
ஜபல்பூர்: பிஹார் தேர்தலில் பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நர்மதா மஹோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு வருகை தந்துள்ள மைதிலி தாக்கூர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எங்கள் சொந்த ஊர் உள்ள பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனது கிராமப் பகுதியுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதால் அங்கு போட்டியிட விரும்புகிறேன்.