
சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலுவலகம் சார்பில், பிரதமரின் விக்சித்பாரத் ரோஸ்கர் யோஜனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப்பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப் பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் கூறியதாவது: சென்னை மற்றும் புதுச்சேரியின் மண்டல அலுவலகத்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஒன்றிணைந்து, பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனாவை நடத்துகிறோம்.