• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும்.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் அரசு கேபிள் டிவி செட்​டாப் பாக்​ஸ்​களைத்​தான் பொருத்த வேண்​டுமென்று நிர்ப்​பந்​திப்​ப​தைக் கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு கேபிள் டிவி அலு​வல​கத்தை முற்​றுகை​யிடும் போராட்​டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கம் அறி​வித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *