
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், மந்திரா எனும் தனியார் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் செட்டாப் பாக்ஸ்களை வாங்கவும், நல்ல நிலையில் இருக்கும் பாக்ஸ்களை மாற்றவும் நிர்ப்பந்திப்பதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் நடத்திவரும் இடங்களில் புதியவர்களுக்கு ஒளிபரப்பு (எல்சிஓ) உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களைத்தான் பொருத்த வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கேபிள் டிவி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் அறிவித்தது.