
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் டார்ஜிலிங் அருகில் உள்ள நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட அம்மாநில பாஜக எம்பி கஜேன் முர்மு நேற்று காலை சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், காரிலிருந்து இறங்கிய எம்.பி. கஜேன் முர்மு மீது கல்வீசி தாக்கினர். இதில் அவரது தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.