• October 7, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​கள் 11 பேரை தாக்கி படகு​களில் இருந்த வலை உள்​ளிட்ட பொருட்​களை இலங்கை கடற்​கொள்​ளை​யர்​கள் கொள்​ளை​யடித்​துச் சென்றனர். நாகை நம்​பி​யார் நகரைச் சேர்ந்த விக்​னேஷ்(28), விமல்​(26), சுகு​மார்​(31), திரு​முரு​கன்​ (31), முரு​கன்​(38), அருண்​(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரை கிழக்கே மீன்​பிடித்து கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு வந்த இலங்கை கடற்​கொள்​ளை​யர் 8 பேர், மீனவர்​களின் படகில் ஏறி இரும்​புக் கம்​பி, கட்​டை, கத்தி உள்​ளிட்ட ஆயுதங்​களால் மீனவர்​களைத் தாக்​கி, அவர்​களிடம் இருந்த வெள்ளி செயின், இன்​ஜின், செல்​போன், ஜிபிஎஸ் கரு​வி, வாக்கிடாக்கி ஆகிய​வற்றை பறித்​துச் சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *