
கரூர்: “கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார்.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி இன்று கரூர் வந்தார். அப்போது, சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், தவெகவினர் ஏற்கெனவே அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் முனை, உழவர் சந்தை ஆகிய இடங்களை பார்வையிட்டார்.