• October 6, 2025
  • NewsEditor
  • 0

கோவை: தவெகவுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது என கூறுவது அபத்தம் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து உட்கொண்ட 11 குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் வேதனைக்கு உரியது. இது குறித்து ராஜஸ்தான் மற்றும் தமிழக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வுக் குழு காஞ்சிபுரத்துக்கு வருகை தந்துள்ளது. மருந்து கெட்டுப் போகவில்லை, தேவையில்லாத பொருளை உள்ளே கலந்துள்ளதால் விஷமாக மாறி உள்ளது. விசாரணை முடிவில்தான் உண்மை காரணம் தெரியவரும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *