
“கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு பெறுவதும் எங்களது உரிமை. இப்படி பேசுவதால், ‘நாங்கள் கூட்டணி மாறுவோம் ’என்று வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில், எங்கள் நண்பர்களிடம் எங்களது உரிமையை நாங்கள் கேட்கிறோம். முன்பு நாங்கள் 110 தொகுதிகளில் கூட போட்டியிட்டிருக்கிறோம்” என்று அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார்.
இந்நிலையில், வாக்குத் திருட்டு நடப்பதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சின்னசேலத்தில் நேற்று முன்தினம் (அக்.4) கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்காக கே.எஸ்.அழகிரி மாலை 5 மணிக்கே வருவதாக கட்சியினர் தெரிவித்திருந்தனர். கூட்டத்தைக் கூட்டி பந்தலில் அமர வைத்தனர்.