• October 6, 2025
  • NewsEditor
  • 0

தென்காசி: ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மரங்களை வெட்டி இயற்கையை அழிப்பதாக கூறி, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *