• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, தொழிற் கல்வி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்களை முந்தைய அரசுகள் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி உள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக அதே பாடங்களில் பணிபுரியும் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *