• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்​து துறை செயலர் சுன்​சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு போக்​கு​வரத்​துக் கழக வளர்ச்சி நிதி நிறுவன மேலாண் இயக்​குநருக்கு அனுப்​பிய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களுக்கு பண்​டிகை கால முன்​பணம் வழங்​கும் வகை​யில் ரூ.152.28 கோடியை கடனாக வழங்​கு​மாறு போக்​கு​வரத்​துத் துறை தலை​வர் அலு​வல​கம் கோரி​யுள்​ளது.

அதன்​படி, மாநகர போக்​கு​வரத்​துக் கழகம், விரைவு போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம், சேலம், கோவை, கும்​பகோணம், மதுரை, நெல்லை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தலா ரூ.11.94 கோடி, ரூ.7.35 கோடி, ரூ.22 கோடி, ரூ.12.08 கோடி, ரூ.28.30 கோடி, ரூ.33.91 கோடி, ரூ.23.08 கோடி, ரூ.13.62 கோடியை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *