
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள் குறித்து சம்பத் ராம் விளக்கமளித்துள்ளார்.
உலகமெங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக சம்பத் ராம் நடித்துள்ளார். முழுக்க கறுப்பு மை கொண்ட மேக்கப் போட்டிருந்ததால் இதனை அடையாளம் காண முடியவில்லை.